Thursday, February 12, 2009

தனிமை.. அமைதியின் விளிம்பில்..

ஆழ்மனத்தை,
அலசும் நேரம்..
இருட்டறையில்,
அறியாத ஒன்றை புரியாமல்
தேடும் நேரம்..
தேடுகையில் அகப்பட்டதொன்று,

வறுமையில் தனிமை,
உழைப்பின் ஊதியத்தின் நினைப்பில்..

இசையில் தனிமை,
விழிகளில் பூக்கும் நீர்த்துளியின் நினைப்பில்..

கடமையில் தனிமை,
இழந்த மகிழ்ச்சியின் நினைப்பில்..

பயணத்தில் தனிமை,
பக்கத்து இருக்கை நங்கையின் நினைப்பில்..

மழையில் தனிமை,
மழழை மொழியில் மூழ்கும் நினைப்பில்..

இருளில் தனிமை,
நேசித்தவளின் தொலைத்த அன்பின் நினைப்பில்..

போதையில் தனிமை,
பாதையில் இடரிய வடுவின் நினைப்பில்..

வலியில் தனிமை,
அதை விதைத்தவளின் நினைப்பில்..

தனிமை,
தன்னை தானே அறியும் நிலை,
அமைதி விளிம்பின் இனிமை,
இருட்டறையில் சிக்கிய மெழுகுதிரி...
அடுத்து தேடவேண்டியது
தீக்குச்சிதான்....