அசுர வேக பஸ்ஸிலே
அலை அடிக்கும் கூட்டத்தின் நடுவே
அரை அடி உயர செப்பலினால் மிதிபட
பிடித்திருப்பது பிடியா இல்லை இடையா என்று தவிக்கையில்...
அங்கே...
அவள்...
புயலில் சிக்கிய பூவானாலும்.. இன்னும் அதே ரம்மிய வாசனை...
குளிர்ந்த நீரையும் சூடாக்கும் அதே பார்வை...
நஞ்சையும் அமுதமாக்கும் அதே உதடுகள்...
அவளேதான்.. அமுதா..
அன்று ஜின்ஸில் இன்று புடவையில்..
அழகுக்கு அர்த்தம் அமுதாவா... இல்லை
அவளே அழகுக்கு சான்றா...
குழம்பியது அறிவா... வயதா...
மிதிபடுவது பாதமா... பருவமா...
பொங்கும் சனத்தின் மத்தியிலும்
அவள்
சலனமின்றி நின்றாள்..
புதுப்பொழிவுடன்..
புடவை போஸ்டரில்
நடிகை அமுதா!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment